:
Breaking News

விஜயகாந்த் இல்லாமல் மதுரை வந்தது சோகமாக உள்ளது - பிரேமலதா

top-news

மதுரை ஆரப்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் அவர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மக்கள் விரும்பும், வெற்றிக் கூட்டணியாக அதிமுக தேமுதிக கூட்டணி உள்ளது.

மதுரை என்றாலே விஜயகாந்த் தான். அவர் இல்லாமல் மதுரை வந்தது சோகத்தையும் மன அழுத்தத்தையும் தந்துள்ளது. மதுரை மண்ணில் பிறந்த குழந்தைக்கு எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் பெயரை வைக்கும் விதமாக விஜய ராமச்சந்திரன் என பெயர் சூட்டுகிறேன் என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *